2025 ஜூன் 25, புதன்கிழமை

அரசியற்கைதிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

George   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ந.நவரத்தினராசா

அரசியற்கைதிகளின் வாழ்வாதார உதவித்திட்ட செயற்பாடுகள், மீன்பிடி போக்குவரத்து கிராமிய அமைச்சினால் புதன்கிழமை 15 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி, கைத்தொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


'யாழ். மாவட்டத்தில் 157 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 61 குடும்பங்களும் வவுனியா மாவட்டத்தில் 23 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 38 குடும்பங்களும் முல்லைதீவு மாவட்டத்தில் 45 குடும்பங்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்தக்குடும்பங்கள் யாரிடமும் கையேந்தும் நிலை இருக்க கூடாது. இந்த 324 குடும்பங்களும் தமது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற வேண்டியது அவசியமாகும்.

இதற்காக 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குடும்பங்கள் உரிய முறையில் கிராமிய அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூலம் இனங்காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .