Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 24 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பாடசாலை மாணவர்களின் முகநூல் மற்றும் அலைபேசி பாவனை குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி எப்.யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.
யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (23) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.
யாழ். கல்வி வலயத்தில் கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தேன்.
அதன் போது சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்புணர்வு மற்றும் குற்ற செயல்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் அதன் ஊடாக மாணவர்களை அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என கூறினேன்.
அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறித்தும் பெற்றோர் அறிந்து இருக்க வேண்டும். அதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் வகுப்பாசிரியர்களுக்கு பெற்றோர் அறிவிக்க வேண்டும். அதேபோன்று பாடசாலைக்கு மாணவர், சமூகம் அளிக்காவிடின் வகுப்பாசிரியர், பெற்றோருக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
பாடசாலை அதிபர் வகுப்பாசிரியர் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
மாணவர்களின் முகநூல் பாவணை மற்றும் தொலைபேசி பாவனை குறித்தும் அவர்களின் நண்பர்கள் குறித்தும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
2 hours ago