2025 மே 19, திங்கட்கிழமை

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 13 வர்த்தகர்களுக்கு தலா 4 ஆயிரம் அபராதம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (ரஜனி)
21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 13 வர்த்தகர்களுக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தலா 4 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ். நகரப்பகுதியில் யாழ். மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 13 வர்த்தகர்களும் கைதுசெய்யப்பட்டு, யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராசா, மேற்படி  வர்த்தகர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X