2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

25 வருடங்களின் பின் மடத்துவெளிக் கிராமத்துக்கு மின்சாரம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். வேலணையின்  மடத்துவெளிக் கிராமத்துக்கு 25 வருடங்களின் பின்னர் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின்  மூலம் செவ்வாய்க்கிழமை (29) மின் விநியோகிக்கப்பட்டது. 

இக்கிராமத்துக்கான மின்விநியோகத்தை  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி  அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலர் சதீஸன் மஞ்சுளாதேவி, யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன், வேலணை பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.சிவராசா உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X