2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

25 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், யோ.வித்தியா

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்களையும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

இந்திய நாகை மாவட்டம், பூம்புகார் பகுதியிலிருந்து 60 அடி நீளமான படகுடன் கடந்த 11ஆம் திகதி காலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும், மற்றும் அன்றைய தினம் மாலையில் சிறிய படகு ஒன்றில் கைது செய்யப்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்துறைக்கு அண்மிய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மேற்படி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை பருத்தித்துறை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில், யாழ்.மாவட்டத்தின் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட, படகு இல்லாமல் கரையொதுங்கிய 6 இந்தியர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .