2024 மார்ச் 28, வியாழக்கிழமை

275 கிலோ கஞ்சா கைப்பற்றல்

Niroshini   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்தில்லைநாதன் 

மாதகல் கடலில், 7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா, இன்று (06) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த போது கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

இந்தியாவில் இருந்து படகில் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள்,கடற்படையினரை கண்டதும் அதனைக் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கடற்படையினர் எடுத்து சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X