2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

4 ஏக்கர் காணி சுவீகரிப்புபடவுள்ளதாக அறிவிப்பு

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

9 தனிநபர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் காணியுமே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி காணியானது 5 ஆவது காலாற்படை பெரும்பகுதி தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது,

காணி அபிவிருத்தி அமைச்சின் 1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, காணி எடுத்தல் சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) கீழ் பொதுத் தேவையொன்றிற்காக இந்தக் காணி சுவீகரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணி அமைந்துள்ள கிராம அலுவலரின் அலுவலகத்தில் இவ் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X