2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

90 மது போத்தல்களுடன் ஐவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 21 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், தனிநபர் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட  அளவிலும் பார்க்க அதிகளவான மதுபானப் போத்தல்களை உடமையில் எடுத்துச் என்ற குற்றச்சாட்டில், 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து, 90 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒருவர், 10 மதுபானப் போத்தல்களுக்கு மேல் கொள்வனவு செய்து எடுத்துச் சென்ற போதே, பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் மூவரும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் ஒருவரும், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக, மொத்தமாக 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .