2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

91 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 மே 04 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பருத்தித்துறையில், இன்று (04) அதிகாலை 2 மணியளவில், 95 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதிகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கிடைக்​கப்பெற்ற தகவலொன்றையடுத்து, பருத்தித்துறை - சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக வந்த வான் ஒன்றை வழிமறித்து பருத்தித்துறை பொலிஸார் சோதனை செய்த போது, அதில், 45 கேரள கஞ்சா பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வானில் இருந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், வான் சாரதி கைதுசெய்யப்பட்டார்.

யாழில், கடந்த 24 மணித்தியாலங்களில், 313 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X