Niroshini / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்
தொண்டைமானாறு - சந்நிதியான் ஆச்சிரமத்தால் வடமராட்சி பருத்தித்துறை - கொடிகாமம் தனியார் பஸ் சேவைச் சங்கம் சார்ந்த சாரதி, நடத்துனர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கொவிட் - 19 இடர்கால நிவாரண உதவித் திட்டத்துக்கு அமைவாக பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலாளர்களின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் பருத்தித்துறை - கொடிகாமம் சார்ந்த சாரதிகள், நடத்துனர்களைச் சேரந்த 35 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 75,000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருள்களான அரிசி, மா, சீனி, பருப்பு உள்ளடங்கலாக வழங்கப்பட்டன.
வணக்கத்துக்குரிய மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால், சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வடமராட்சி - பஸ் சேவைச்சங்கம் 759 பாதை இலக்க நிர்வாகிகளிடம், நேற்று முன்தினம் (28), இவை கையளிக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago