2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில், 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும் ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .