2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆசன வாயிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், லைடன் சந்திப் பகுதியில் ஆசன வாய்ப் பகுதியில் 5 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த நபரொருவரை, செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மேற்படி சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

பொம்மைவெளிப் பகுதியிலிருந்து மேற்படி கஞ்சாவை கொள்முதல் செய்ததாக சந்தேகநபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .