2025 மே 01, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்துப் போராட்டம்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த், எஸ். நிதர்ஷன் 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். 

காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள், பின்னர் அங்கிருந்து பிரதேச செயலகம் வரையில் பேரணியாகச் சென்றனர். 

பிரதேச செயலகத்துக்கு பேரணியாகச் சென்ற மீனவர்கள், பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர். 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் செல்வதனால், எமது கடல் வளங்களும் , கடல் சூழலும் ,எமது உபகரணங்கள் , வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்படுகிறது. 

அதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். பல தரப்புக்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளோம். இருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

“வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபாய். அதற்கான நஷ்டடஈடுகளை பெற்றுத் தர ஆவன செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அதேவேளை மலர்ந்துள்ள இவ்வாண்டுக்குள் எமக்கு தீர்வைப் பெற்று தர சகல தரப்பினரும் முயற்சியை முன்னெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளத்தையும் காத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .