2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று (22) கைது செய்துள்ளனர்.

தமிழகம் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் கைப்பற்றினார்கள்.

குறித்த மீனவர்களை யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X