Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருளை கிழக்குக்கான இறக்குமதி வரி, இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், 20 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம், நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கக்கோரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதையடுத்து, உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரியை 20 ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு, விவசாய அமைச்சர் பி.ஹரிசனுக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதையடுத்தே, இந்த வரி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago