Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 11 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை அதிரடிப்படையின் தாக்குதல் மீண்டும் ஒரு முறை ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இது போன்ற ஊடகவியலாளர்களது பணிகளை முடக்கும் வகையிலான தாக்குதல்களை வன்மையாக கண்டித்து, யாழ்.ஊடக அமையம் தொடர்புடைய சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி
சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களை மீட்க வந்த ஊடகவியலாளர்கள் மீது இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியமையினை யாழ்.ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உன்னதமான ஊடகப்பணி காரணமாக 41 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 2000ம் ஆண்டு முதல் காவு கொள்ளப்பட்டுள்ளனர். சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் இருந்தன. அரசியலமைப்பில் அறிவிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை சட்டங்களின் படி, வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் அவர்களின் அடிப்படை உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த 1994 ஆம் ஆண்டின் 22 ஆம்இலக்க சித்திரவதை மற்றும் பிற கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதை அல்லது தண்டனைச் சட்டத்திற்கு எதிரான உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டவும் விரும்புகின்றது.
தற்போதைய நெருக்கடி மிக்க கால எல்லையினுள் தலைநகர ஊடகவியலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினையும் கோரி நிற்கின்ற யாழ்.ஊடக அமையம் இன மத மொழி வேற்றுமையைத் தாண்டி சக ஊடகவியலாளர்களது உரிமைக்கு கைகோர்த்து நிற்குமென்பதையும் அறியத்தருகின்றது. (R)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago