Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செந்தூரன் பிரதீபன்
இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நெல்லியடி மாலுசந்தி பிரதேசத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 23, 24 வயதுடைய பலாலி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இருவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .