2025 மே 03, சனிக்கிழமை

கசிப்புடன் பொலிஸாரிடம் சிக்கிய பெண்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கானை சேர்ச் வீதி பகுதியில் இன்றையதினம் (08)  கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 5 லீற்றர் கசிப்பு மற்றும் 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை கசிப்புடன் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X