2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கடல் ஆமையை வளர்த்தவர் கைது

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூர் என்ற தீபன்

ஊர்காவற்றுறை, மெளிஞ்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடலாமை பிடித்து வைத்திருந்த 55 வயதுடைய நபரொருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, மெலிஞ்சிமுனை பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறைக்குள் மறைத்து வைத்து வளர்க்கப்பட்டிருந்த 20 கிரோகிராம் நிறையுடை கடலாமை இதன்போது மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட கடலாமையை, நீரியல்வள அதிகாரிகளின் உதவியுடன், ஆழ்கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X