Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இராணுவ, விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுவன் - மயிலிட்டி இடையேயான சுமார் 400 மீற்றர் (5 ஏக்கர்) வீதியை விடுவிக்க வேண்டுமென, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக அங்கஜன் இராமநாதன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, இது குறித்து, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், கட்டுவன் - மயிலிட்டி இடையேயான சுமார் 400 மீற்றர் (5 ஏக்கர்) வீதியைத் திறப்பதற்கு, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி (ஜே-240) வரையான மயிலிட்டி வடக்கு (ஜே246 கிராம அலுவலர் பிரிவு) பகுதி விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனரெனத் தெரிவித்துள்ள அவர், எனினும், கட்டுவன் - மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீதி, யாழ்ப்பாணம் விமான நிலையம், மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறதெனத் தெரிவித்துள்ள அவர், அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் மக்கள் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்தி வரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தடையால் 400 மீற்றர் வீதி, காப்பெட் வீதியாகப் புனரமைக்க முடியாத நிலையில் இழுபறியாக உள்ளது. கட்டுவன் - மயிலிட்டி வீதியில் உள்ள கிராமக்கோட்டு சந்திக்கு எதிர்புறமாக தெற்கு பக்கமாக உள்ள 400 மீற்றர் வீதி, விமானப் படையினர் அமைத்துள்ள கம்பி வேலிக்குள் உள்ளது.
இதனால் இவ்வீதியால் போகமுடியாது திரும்ப வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago