Niroshini / 2021 நவம்பர் 29 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி, இன்று (29) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் கிழக்கு, ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில், 3 பரப்பு காணி, கடற்படையினரின் தேவைக்கென சுவீகரிப்புக்கும் முகமாக, இன்று காலை, நில அளவை திணைக்களத்தால், அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன.
இதன்போது, அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர்.
இதை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025