2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குடும்பத் தகராறு: இளைஞன் மீது வெட்டு

Niroshini   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தில்லைநாதன்

கரவெட்டி மேற்கு பகுதியில், கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் லக்சன் (வயது-28)  என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.

உறவினர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .