Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, யாழ்.மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

குருநகர்ப் பகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சனையாக அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடிகளான கழிவு வாய்க்கால், வீதி சீரின்மை, வீதி விளக்குகள் அற்ற தன்மை போன்றவற்றை நிவர்த்தி செய்யுமாறு அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, அங்கு காணப்படும் நெருக்கடியை தீர்ப்பதுக்காக குறித்த கிராமத்தின் சகல அமைப்புக்கள், மக்களின் பிரதிநிதிகளையும் துறைசார் வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அந்த தீர்மானத்துக்கமைய குறிப்பிட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குருநகர் கலையரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு விசேட திட்டமிடல் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
41 minute ago