2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை’

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் கைதிகள் விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு  10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும், அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்தனர். ஆனால் தற்போது அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இம்முறை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்போது, அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பில் கோருகின்றோம் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X