Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
தெல்லிப்பளை - கட்டுவான் பகுதியில், அண்மையில், அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி, அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், தெல்லிப்பளை - வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரென, தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
17 May 2025