2025 ஜூன் 25, புதன்கிழமை

கோப்பாயிலும் ’ட்ரோன்’ கண்காணிப்பு

Niroshini   / 2021 மே 28 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கோப்பாய் பொலிஸ் பிரிவில், விமானப் படையின் உதவியுடன்,  ட்ரோன் கமெரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை, இன்று (26) காலை  11.25 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில், ட்ரோன் கமெராவின் உதவியுடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கை, கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை, யாழ்ப்பாணம் மாநகரில் புதன்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (28), கோப்பாய் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .