2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கோப்பாய் விபத்தில் விரிவுரையாளர் உயிரிழப்பு

Editorial   / 2022 மார்ச் 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன்  உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து, கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியிலேயே நேற்றிரவு  8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கரவெட்டியிலுள்ள வீட்டிலிருந்து இரவு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்தில், வீதி வெளிச்சம் இல்லையென அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .