2025 மே 03, சனிக்கிழமை

கோர விபத்தில் கணவன் மரணம்; மனைவி படுகாயம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X