2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுநீர் கழித்தவர்கள் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்கள் மற்றும் புகைப்பிடித்தவர்கள் என 15 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது இடத்தில் புகைப்பிடித்து ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 13 பேரும் சிறுநீர் கழித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .