2025 மே 05, திங்கட்கிழமை

சடலத்துடன் வந்தோருக்கு சிக்கல்

Editorial   / 2020 நவம்பர் 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்ப்பாணம் காரைநகருக்கு எடுத்து வந்த ஐவர், தத்தமது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

காரைநகரை சேர்ந்த நபர், கொழும்பு - 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி சடங்குச் செய்து பூதவுடலை தகனம் செய்யும் நோக்குடன், கொழும்பிலிருந்து காரை நகருக்கு எடுத்துவந்தனர்.  

அவர்கள், தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார். 

இறந்தவரின் சடலம் கோம்பயன் மயானத்தில் உள்ள  மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X