2025 ஜூன் 21, சனிக்கிழமை

‘சதியைப் பற்றிப்பேச சுமந்திரனுக்கு அருகதை இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. சதியைப் பற்றிப் பேசுவதுக்கு சுமந்திரனுக்கு எந்தவித யோக்கியமும் கிடையாது” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் நேற்று (18) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து மிக நீண்ட நாட்களின் பின்னர் தான் சபைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபைகள் அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு கட்சிகளோ எவையும் எங்களுடன் பேச்சுவார்த்தை எதனையும் நடத்தவில்லை. வடக்கு கிழக்கு முழுவதும் எங்களுக்கு ஆசனங்கள் இருக்கின்றன.

அவ்வாறிருக்கையில் சபைகளை அமைப்பதற்கு பல பேருக்கு எங்களது ஆதரவுகள் தேவையாகவும் இருந்தன. ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் பேசி சபைகளை அமைப்பது தொடர்பாக எங்களுடன் பேசியிருக்கவும் ,ல்லை. அவ்வாறு பேசுவதற்கு தயாராகவும் அவர்கள் இல்லை. நாங்கள் ஏறத்தாழ ஒன்றரை மாதத்துக்கு முன்னர் இது குறித்த கட்சியின் செயலாளர் கூட்டமைப்பு உட்பட எவரும் எங்களுடன் பேச வேண்டுமானால் அவ்வாறு பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகக்கு யாரும் முன்வரவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் ஒரு பொதுவானதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அதன் பிரகாரமே யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சியிலும் யாருக்கும் ஆதரவு இல்லாத நடுநிலையை வகித்திருந்தோம். இறுதியாக நடைபெற்ற வவுனியா நகர சபையில் நடந்த தேர்தல் தொடர்பில் சிவில் சமூகத்தினால் எங்களுக்கு பல வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வளவு நடந்தும் கூட கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சியினர் அல்லது கூட்டமைப்பு என்ற பெயரில் இருக்கக் கூடியவர்கள் எம்முடன் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லை. ஆனால் என்னுடன் சிவாஐpலிங்கம் பேசியிருந்தார். ஆனால் கூட்டமைப்பு சார்பாக அவரது பேச்சுக்கள் இருந்ததாக நான் நம்பவில்லை. ஏனெனில் அவருடைய கருத்து ரெலோவின் கருத்து என்று மாவை சேனாதிராசாவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் வவுனியா கூட்டத்திலும் கூட நாங்கள் நடுநிலை வகிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அங்கு நிலைமைகளைப் பார்க்கின்ற போது, தமிழரசுக் கட்சியினர் தோல்வியடைந்து அரச ஆளும் கட்சியினரே வெல்லக் கூடிய சூழல் இருந்ததை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவ்வாறான சூழலில் நாங்கள் 3 பேர் தான் ,ருந்தாலும் கூட போட்டியிட வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தம் எமக்கு சிவில் சமூகத்தாலும் பொது மக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாங்கள் போட்டி போட்டோம். எமது கொள்கையின் பிரகாரம் நாங்கள் கூட்டமைப்பபுக்கு வாக்களிக்க முடியாது. அதே போன்று வேறு எவருக்கும் வாக்களிக்க முடியாது. அந்த வகையில் போட்டி போட்டதில் நாம் நியமித்த வேட்பாளர் ஏதோவொரு வகையில் வெற்றி பெற்றிருக்கின்றார். ஆகவே இது எந்தவிதமான சதியும் அல்ல.

இதற்கு மேலதிகமாக சதியைப்பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது. அவர் நாடாளுமன்றுக்கு போனதில் ,ருந்து இன்று பல்வேறுபட்ட பிரதேச சபைகளை உருவாக்குவதில் பெரும் சதிகளை அவர் நடத்தியிருக்கின்றார். இங்கே சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபை உட்பட பல சபைகளில் பெரும்பான்மை இல்லாத போதும் கூட ஏனையோரின் ஆதரவைப் பெற்று அங்கே ஆட்சியமைத்திருக்கின்றார்.

ஆகவே அவ்வாறான சூழ்நிலையில் சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவது எந்தவிதமான அர்த்தமும் இல்லாத விடயம். அது மாத்திரமல்லாமல் எல்லா இடங்களிலும் தாங்கள் ஆட்சியமைக்க விரும்புவதும் அவ்வாறு தாங்கள் ஆட்சியமைக்கா விட்டால் அது சதி என்று முத்திரை குத்துவதும் அது சதி செய்பவர்களின் இயல்பாக இருக்கலாமே தவிர, இதில் வேறு எந்தவிதமான விடயமும் அல்ல” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .