2024 மே 13, திங்கட்கிழமை

தங்கம் கடத்தல் ; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

Janu   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பகுதியில்  கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 4  கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டு,   இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை  (27) பதிவாகியுள்ளது .

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-09 வீதியூடாக வவுனியாவுக்கு காரொன்றில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவதாக  இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையிலேயே   , கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில்  வைத்து விசேட அதிரடிப்படையினரால் குறித்த கைது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X