Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 30 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர், அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தனது சட்டைப் பைக்குள்ளிலிருந்த பிளேட்டை எடுத்து தனது கழுத்தில் 4-5 முறை கீறிக் கொண்டார்.
சம்பவத்தையடுத்து, சந்தேகநபரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸார் அனுமதித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025