2025 ஜூலை 02, புதன்கிழமை

திடீர் சுற்றிவளைப்பில் 15 உணவகங்கள், 4 மருந்தகங்கள் சிக்கின

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைய, சங்கணைப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில், உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆளுநர் செயலணியினரும் இணைந்து, நேற்று (19) திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, 15 உணவகங்கள் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றில் தரமற்ற உணவு தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், ஓர் உணவகத்தில் காணப்பட்ட தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

மேலும், சுகாதார சீர்கேடுகளுடனும் தரமற்றும் காணப்பட்ட ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறு தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்கநர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும், இந்தச் சோதனை நடவடிக்கள் தொடருமென்று தெரிவித்த அதிகாரிகள், தகுதியற்ற உணவங்கள் காணப்படின், மக்கள் அது தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தரலாமெனவம் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .