2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருச்சி போராட்டத்துக்கு யாழில் ஆதரவு

Niroshini   / 2021 ஜூன் 16 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இந்தியா - தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில், இன்று (16) காலை 9 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்களின் உறவினர்கள், தங்களது வீடுகளில், இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்  தங்களது உறவுகளை விடுதலை செய்யக் கோரி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு குறித்த போராட்டமானது தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை தொடரும் எனவும், போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X