2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தேர்த் திருவிழாவில் சங்கிலிகள் மாயம்

Freelancer   / 2022 மார்ச் 02 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். திருநெல்வேலி காளி கோயில் தேர்த் திருவிழாவின் போது  பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த நான்கு பேருடைய தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஆலயத்திற்கு வருகை தந்த வெளி  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

மேலும் இது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .