2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாகர்கோவில் கடற்கரையில 96 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் கடற்கரையில், இன்று (07) காலை, 96 கிலோகிராம் கேரள கஞ்சா, கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் கடற்கரையில், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்துப் பணியின் போதே, கரையோரத்துக்கு அருகில் இருந்து, 3 சாக்குகளில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

கடத்தல்காரர்களால் அவை கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையின் மேற்பார்வையில், வடக்கு கடற்படைத் தளத்தில் வைத்து அழிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .