Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வரவு - செலவுத் திட்டங்களில் அரசாங்கம் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாத விடயங்கள் தொடர்பிலும் அடுத்தாண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடகப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பொது மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் பாராளுமன்ற நிதிக் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நாடாளுமன்ற நிதிக் குழுக் கூட்டம், யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மேற்படி குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன் போது, இந்தக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் கூட்டத்தை நடத்துவதன் நோக்கம் என்பன தொடர்பில் குழுவின் தலைவர் எடுத்துக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறியிருந்தனர்.
இதில் மிக முக்கியமாக மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகின்ற நிதி கடந்த வருடத்திலும் விடவும் இந்த வருடம் பல மடங்கு குறைவாக ஒதுக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள் என்பன தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, அடுத்த வருட ஒதுக்கீட்டில் இதனை அதிகரிக்க வேண்டுமென முன்வைத்த கோரிக்கையை சாதகமாகப் பரீசீலித்த மேற்படி குழுவானது இந்த விடயங்களை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் போராளிகளை வேலைக்கு அமர்த்துவது சம்பந்தமாக, கடந்த வரவு –செலுவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை சரியான முறையில் அமுல்படுத்தப்படாதமை குறித்து ஆராயப்பட்டு, அதற்கான மாற்று வழிகள் தொடர்பிலும் பரீசீலிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் சம்பந்தமாக பிரத்தியோகமாக திட்டங்கள் வரையப்பட வேண்டுமென்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. அதே போன்று புகையிலை தடை செய்யப்படுவதால் அதனை நம்பியிருக்கின்ற 36 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கை தொடர்பிலும் பேசப்பட்டது.
இவ்வாறு வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தன. அதே நேரம் வரவு - செலவுத் திட்டங்களில் முன்மொழியப்பட்டு அவை நடைமுறைப்ப்படுத்தப்படாமல் இருக்கின்ற விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டன. ஆகவே, ஆடுத்த வரவு - செலவுத் திடத்தில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு விசேட நீதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் மத்திய அரசாங்கம் தீர்மானித்ததையே செய்யுமாறு கூறுவதால் மாகாண சபையால் எதனையும் செய்ய மடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் பகிரப்பட்டிருக்கின்ற மாகாணத்தின் அதிகாரங்களில் மாகாணசபைக்கான நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் பறிப்பபதாகவும் இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காத வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாவட்டத்துகு தேவையான பல விடயங்கள் மற்றும் இருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு மேற்படி குழு தன்னுடைய சிபார்சுகளைச் செய்யுமென குழுவின் தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago
58 minute ago