Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு, அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார் .
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “உயிரிழந்த பயணி, யாழில் இருந்து வயாவிளான் நோக்கி பஸ்ஸில் பயணித்துள்ளார். பயணத்தின் போது, பஸ்ஸில் தூங்கியமையால், வயாவிளானில் இறங்கவில்லை. பஸ் நடத்துனரும், அதைக் கவனிக்கவில்லை .
அவர் மீண்டும் வசாவிளான் செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் பஸ்ஸில் பயணித்த போது , புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் பஸ் காத்திருந்துள்ளது.
அதன்போது , குறித்த பயணி, பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி, நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார் . அதனை அவதானிக்காக சாரதி பஸ்ஸை எடுத்த போது பயணி மீது பஸ் ஏறியுள்ளது .
இதில் பயணி சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து, பஸ்ஸின் சாரதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Jun 2025
21 Jun 2025