2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பு கோரி விண்ணப்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரும், தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என வடமாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்து உள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடமாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி. தவராசா உட்பட மூவர் தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என, விண்ணப்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X