2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிள்ளையார் கோவில் விஷமிகளால் இடித்தழிப்பு

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் கோவில், விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

யாழ்.- கண்டி நெடுஞ்சாலையின் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவிலே, இவ்வாறு நேற்று (07)  இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது
 

இந்நிலையில், இன்றைய தினம் (08) காலை, கோவில் இடித்தழிக்கப்பட்டதை மக்கள் கண்ணுற்று, அது தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .