Janu / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதான ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது 8 கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணமும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டது.
குறித்த நபரை விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிதர்ஷன் வினோத்

6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago