Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 10 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தமிழ்த் தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனை, பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வறுமைக்குட்பட்ட மக்களுக்கு, தன்னார்வாளர்களால் பல உதவிகள், கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தன.
அந்தவகையில், மஸ்கெலியா பகுதியில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் பொருள்களை சேகரித்து, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப.தவபாலன் முன்னின்று வழங்கியிருந்தார்.
இவ்வாறான உதவியை மேற்கொண்டமைக்காக மேற்படி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணியின் நிமித்தம் தான் வெளியே சென்றிருந்த வேளை, தனது வீட்டுக்குச் சென்ற பொலிஸார், தனி சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்ட அழைப்பாணையை வழங்கிச் சென்றுள்ளதாகவும் அதில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago