2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாடு முட்டியதில் முதியவர் மரணம்

Editorial   / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வளர்ப்பு மாடு முட்டி , படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த, மண்கும்பான் பிள்ளையார் ஆலய காவலாளியான நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 29ஆம் திகதி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான மாட்டினை கட்ட முற்பட்ட போது , அவரை மாடு வயிற்றுப்பகுதியில் முட்டியதால், மாட்டின் கொம்புகள் குத்தி படுகாயமடைந்திருந்தார். 

அதனை அடுத்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .