2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாதகலில் மக்கள் போராட்டம்

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கஞ்சா கடத்திய சந்தேகத்தில், கடற்படையினரால்  கைது செய்யப்பட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆதரவாக, அப்பகுதி மக்கள், இன்று (07), போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், "குறித்த இருவரும்  கடலுக்கு சென்று திரும்பி வரும் வேளையில் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.

"இதன்போது கடற்படையினரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவ்விடத்தில் நின்றனர். இந்நிலையில், கடலில் மிதந்து வந்த, சுமார் 276 கிலோகிராம் கஞ்சாவை அவர்கள் கடத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

"கைதுசெய்யப்பட்டவர்கள் பயணித்த படகு சிறியது. அந்தப் படகில் தொழில் முதல்கள் இருந்தன. இந்நிலையில் 276 கிலோகிராம் கஞ்சா அவ்வாறு அந்த படகில் கொண்டு வருவது?

"அத்துடன், அவர்கள் பயணித்த படகின் ஜி.பி.எஸ்ஸினை பார்த்தால் அவர்கள் பங்கு உள்ளது. கஞ்சா கடத்தும் இடத்துக்கு சென்று உள்ளார்களா என தெரியவரும்.

"கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர், 'நீங்கள் காணி சுவீகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே' என, ஈவிரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர். நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்ற வேளை அவர்கள் எமக்கு  விடயத்தை கூறியுள்ளார்கள்.

"எனவே, கைது செய்யப்பட்டவர்களை, சரியாக விசாரணை செய்து உண்மை தகவலை வெளிப்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X