2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மீன்பிடி கலங்களுக்கு கண்காணிப்பு உபகரணங்களை இணைப்பதற்கு நடவடிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைப்பதற்கு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.  

பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான எல்லைகளைத் தாண்டுவதும், இயற்கை அனர்த்தங்களால் திசைமாறிச் செல்வதும், கடற்றொழிலாளர்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. 

இதேவேளை, கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கடற்கலங்களைக் கண்காணிக்கும் உபகரணங்கள் உதவும் என்றுத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்த உபகரணங்களை கடற்றொழில் அமைச்சு பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கு ஐ. எம். ஓ. நிறுவன பிரதிநிதிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .