Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் தில்லைநாதன்
வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை கடற்பரப்பில், நேற்று (28), சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை, அப்குதி மீனவர்கள் மடக்கிப் பிடித்து, நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத 2 1/4 இஞ்சி கண் சுருக்கு வலையைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளை சுற்றிளைத்த அப்பகுதி மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும், 5 படகு மற்றும் சுருக்குவலைகளுடன் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் வடமராட்சி மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .