Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் மற்றும் கோட்டைகட்டியகுளம் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயன்கன்குளம் பொலிருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற மற்றும் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற குற்றத்தின் அடிப்படையில் 6 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அதன் சாரதிகளே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையிலேயே கடந்த 3 நாள்களில் மேற்படி 6 வாகனங்களும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
39 minute ago