2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்று நாள்களில் ஆறு வாகனங்கள் சிக்கின

Editorial   / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, ஐயன்கன்குளம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் மற்றும்  கோட்டைகட்டியகுளம் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐயன்கன்குளம் பொலிருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற மற்றும் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற குற்றத்தின் அடிப்படையில் 6 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அதன் சாரதிகளே மேற்படி  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர்.

இந்நிலையிலேயே கடந்த 3 நாள்களில் மேற்படி  6 வாகனங்களும் சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .