2025 மே 24, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Editorial   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

வடமராட்சி, நெல்லியடி, மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இன்று (24) நண்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக லொறி விபத்தில் கோவில் சந்தையைச் சேர்ந்த  18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மாலிசந்தி நோக்கி வந்து கொண்தயிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறிய ரக லொறியும் மாலிசந்தி, வதிரி வீதியில் வைத்து மோதியுள்ளன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X