Editorial / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், யாழ்., இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் எனும் இளைஞன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை, சாந்தை வீதி, வறுத்தலைவிளான் பகுதியில் இன்று (10) காலை மணல் ஏற்றி வந்த டிப்பர், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே உயிரிழந்துள்ளார். அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமோர் இளைஞர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி, காங்கேசந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago